NATIONAL

பக்காதானின் தேர்தல் அறிக்கையில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம்

கிள்ளான், மார்ச் 11:

பக்காத்தான் ஹாராப்பான் தேர்தல் அறிக்கையில் உள்ள இந்தியர்களுகான சிறப்பு அம்ச திட்டங்கள் இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அதனை வரவேற்பதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினருமான வீ.கணபதி ராவ் தெரிவித்தார்.
அன்று வீதியில் இறங்கி அடிபட்ட உண்மையான ஹிண்ட்ராப் போராட்டதின் மூலம் இந்தியர்களின் பார்வை தேசிய முன்னனியை விட்டு அன்று எதிர்கட்சிகளின் மீது விழுந்தது,வற்றாத ஆதரவை தந்ததின் காரணமாகவும் இன மொழி பாகுபாடு இன்றி அனைவரையும் சமமாக அரவணைத்து செல்லும் பக்காத்தான் ஹாராப்பானுக்கு அசைக்க முடியாத ஆதரவை கடந்த காலங்களில் இந்தியர்கள் வழங்கி வந்துள்ளனர்.

இன்று பக்காத்தான் ஹாராப்பானின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறப்பு அம்ச திட்டங்களும் பாரிசானிடம் போராடி போராடி கேட்டதாகும். இன்று நமது உண்மையான போராட்டதிற்கு கிடைத்த வெற்றியாக அதனை பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு நல்லாட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சான்று என்றும், பக்காத்தான் ஹாராப்பான் இந்தியர்களை மட்டும் இன்றி அனைவரையும் அனைத்துக்கொண்டு புத்ரா ஜெயாவை கைப்பற்றும் நாட்கள் தொலைவில் இல்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

#வேந்தன்


Pengarang :