SELANGOR

பத்து கேவ்ஸ் – மாரான் பெருநடை 2018

பத்து கேவ்ஸ், மார்ச் 21:

செலாயாங் க.தங்கராஜு தலைமையில் இவ்வருடம் 18ஆம் ஆண்டாக நடைபெறும் இப்பெருநடை வரும் மார்ச் 27ஆம் தொடங்கி மார்ச் 31ஆம் தேதி முடிவடையும். பங்கேற்பாளர்கள் மார்ச் 27ஆம் தேதி பத்துமலை காவல் ஓய்வெடுக்கும் இடத்திற்கு மாலை 7 மணிக்குள் வந்துவிட வேண்டும். அன்றிரவு பத்துமலையில் தங்கும் பெருநடையாளர்களுக்கு பத்து கேவ்ஸ் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அமிருடின் ஷாரி இரவு உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் மறுநாள் 28ஆம் தேதி காலை சிற்றுண்டியும் அவரே வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கு க. தங்கராஜு : 016-8782413 / 016-9550404 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

படக்குறிப்பு : சிலாங்கூர் மாநில இந்திய சமூக தலைவர்கள் இணைந்து பத்து கேவ்ஸ் மாறான் பெருநடைக்கு 50 பெட்டி கனிம நீர் வழங்கினார்கள். அவர்களின் சார்பில் சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் மாண்புமிகு வி. கணபதிராவ் ஏற்பாட்டாளர்களிடம் வழங்கினார்.


Pengarang :