NATIONAL

மந்திரி பெசார்: இளைஞர்களே, அனைவரும் எழுச்சியுடன் மலேசியாவை காப்பாற்றுவோம் !!!

ஷா ஆலாம், மார்ச் 17:

சிலாங்கூர் மாநில அரசாங்கம், இளைஞர்களை சரியான முடிவை எடுக்க வேண்டி சட்டமன்றத்தில் என்று வலியுறுத்துகிறது. இதன் வழி மலேசியாவை காப்பாற்றுவது மட்டுமில்லாமல் எதிர்காலத்தில் கண்ணியம் மிக்க நாட்டை உருவாக்க முடியும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். சிலாங்கூர் மாநில இளைஞர்கள் பாரம்பரியம் மற்றும் எதிர்காலத்தை முடிவு செய்யும் நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் என்றார்.

”  நீங்கள் அனைவரும் எழுச்சி பொங்க நாட்டை காப்பாற்ற வேண்டும். மாநில அரசாங்கத்தின் மீது துவப்படும் அவதூறுகளை  முறியடிக்க வேண்டும். மாநில மக்களுக்கு விளக்கங்களை இளையோர்கள்தான் அளிக்க வேண்டும். நம் நாட்டிற்கு தன்முனைப்போடு செயல்படும் இளைஞர்கள் தேவை. இவர்களே எதிர்காலத்தில் நாட்டின் தலைமைத்துவத்தில் முன்னோடிகளாக செயல்படுவார்கள்,” என்று அஸ்மின் அலி கூறினார்.

 

 

 

 

 

மெலாவாத்தி அரங்கத்தில் நடைபெற்ற பாக்காத்தான் அரசாங்கத்தின் 10-ஆம் ஆண்டு விழாவின் மக்கள் பேரணியில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.


Pengarang :