NATIONAL

மந்திரி பெசார்: மக்கள் படும் துன்பம்; அம்னோ தலைவர்களின் பேரின்பம்?

ஷா ஆலாம், மார்ச் 12:

இந்தோனேசியாவின் தேம்போ சஞ்சிகையில் முதல் பக்கத்தில்  வெளியிட்டுள்ள 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) செய்தியை தனது டிவிட்டரில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி பதிவேற்றம் செய்தார். 1எம்டிபி நிதி மோசடி தொடர்பில் தேடப்படும் லாவ் தேக் ஜோ அல்லது ‘ஜோ லோ’ காணாமற்போன மர்மம் என்ன என்று வினவினார்.

”  மக்களின் துன்பம், அம்னோவின் பேரின்பம். நாட்டு மக்கள் கடனில் அவதிப்படும் நிலை, ஆனால் அவர்கள் ஆனந்த கூத்தாடி மகிழ்கிறார்கள். எங்கே ஜோ லோ? ,” என்று கேள்வி எழுப்பினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

குனாவான் முகமட் தோற்றுவித்த தேம்போ சஞ்சிகை இந்தோனேசியாவில் சமூக மற்றும் அரசியல் செய்திகளுக்கு பிரசித்தி பெற்றதாகும். 1எம்டிபி மோசடி தொடர்பில் பல நாடுகளில் விசாரணை நடைபெற்றாலும் மலேசியாவில் இவ்விவகாரத்தை மூடி மறைக்க அரசாங்கம் முயல்வதாக தேம்போ செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#தமிழ் பிரியன்


Pengarang :