NATIONAL

10,000-க்கும் அதிகமான சிலாங்கூர் வாக்காளர்கள் எஸ்பிஆரை எதிர்த்து மனு !!!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21:

நீதி மற்றும் நேர்மையான தேர்தல் கூட்டமைப்பான பெர்சே 2.0, வாக்காளர்கள் மற்றும் சிலாங்கூரில் தேர்தல் சம்பந்தப்பட்ட அமைப்புகள்  நீதிமன்றத்தில் இரண்டு புதிய எல்லை மறுசீரமைப்பு வழக்குகளை பதிவு செய்துள்ளது. மார்ச் 8-இல் ஐவி ஜோஸியா மற்றும் மூன்று வாக்காளர்கள் மலேசிய தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. தேர்தல் ஆணையம் பிரதமரிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மரியா சின் மற்றும் 106 வாக்காளர்களும் கடந்த மார்ச் 20-இல் வழக்கு பதிவு செய்தார்கள்.

பெர்சேவின் இடைக்கால தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி கூறுகையில், ஒவ்வொரு விண்ணபத்தாரரும் 100 வாக்காளர்களை பிரதிநிதிக்க முடியும் என்று விவரித்தார்.


Pengarang :