NATIONAL

அன்வாரின் விடுதலை அர்த்தமானது !!!

அம்பாங், மே 16:

கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் விடுதலை மிகவும் அர்த்தம் நிறைந்தது. இஸ்லாமியர்கள் எதிர் நோக்கி காத்திருக்கும் ரமலான் மாதத்தில் நடந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.

கெஅடிலான் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறுகையில், இந்த சந்தர்ப்பத்தை எதிர் நோக்கி காத்திருந்ததாகவும் மற்றும் 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்ற பின் இது நடந்ததை எண்ணி பெருமிதம் கொள்வதாக கூறினார்.

தேர்தலின் முடிவுக்கு பின் துணைப் பிரதமர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட டாக்டர் வான் அஸிஸா, அன்வார் இன்று செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனையில் இருந்து விடுதலை செய்யப் படுவார் என்று விவரித்தார். இதற்கு முன்பு மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V தலைமையில் நடைபெற்ற பொது மன்னிப்பு மன்றத்தில் அன்வார் இப்ராகிமிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

 

 

 

 

ஆம்கோப் மோல் , பாடாங் தீமோரில் இன்று மாலை தொடங்கி அன்வார் விடுதலையை ஒட்டி மாபெரும் வரவேற்பு விழா கொண்டாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அன்வார் இப்ராஹிம் ஏறக்குறைய 10 மணி அளவில் கலந்து கொள்வார்.

#கு.குணசேகரன்


Pengarang :