NATIONAL

அன்வாரின் விடுதலை உலகத்தின் கவனத்தை ஈர்த்தது

உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஊடக பணியாளர்கள் கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமின் வருகையை முன்னிட்டு செராஸ் புனர்வாழ்வு மருத்துவமனை முன் நிறைந்துள்ளனர். சிறைவாசம் அனுபவித்து விட்டு இன்று விடுதலையான அன்வார் இப்ராஹிம் சிரித்த முகத்துடன் கம்பீரமாக நடந்து வரும் போது அவரின் போராட்டம் மிக உன்னதமான நோக்கத்தை கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது.

எதிர் வரும் ஜூன் 8-இல் விடுதலை அடைவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. இருந்தாலும், 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வெற்றிக்கு பிறகு இது மாற்றம் செய்யப்பட்டது. தேசிய முன்னணியின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு நாட்டின் 7-வது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் விரைந்து நடவடிக்கை எடுத்து டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இன்று விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 


Pengarang :