ஷா ஆலம், மே 25:
சிலாங்கூர் மாநில காவல்துறை தலைவர் டத்தோ மஸ்லான் மன்சூர், பொருளாதார நலன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மத்திய அரசாங்கத்தின் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட அஸ்மின் அலி தனது பணியை சிறப்பாக செய்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
” 14-வது பொதுத் தேர்தல், சிலாங்கூர் மாநிலத்தில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. சிலாங்கூர் மாநில மக்கள் தொடர்ந்து இந்த நடைமுறையை பின்பற்றி முன்னேற்றம் அடைவார்கள்,” என்று கூறினார்.