NATIONAL

துன் மகாதீர் இன்று பிரதமர் அலுவலகத்தில் நுழைந்தார்

புத்ரா ஜெயா, மே 23:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், இன்று அதிகாரப்பூர்வ பிரதமர் அலுவலகமான பெர்டானா புத்ராவில் தனது பணியை தொடங்கினார். இதற்கு முன்பு, துன் மகாதீர் தனது பணியை பெர்டானா தலைமைத்துவ மையத்தில் இயங்கி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 9-இல் நடந்த 14-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி வெற்றி பெற்ற பின் முன்னாள் பிரதமரான துன் மகாதீர் மீண்டும் 92-வது வயதில் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார்.

துன் டாக்டர் மகாதீர் முகமட், காலை 8.25 மணிக்கு பெர்டானா புத்ராவிற்கு கருப்பு நிறத்திலான ஆடையில் வந்திறங்கினார். அவரை பிரதமர்துறை மூத்த துணைச் செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமட் ஸூக்கி அலி வரவேற்றார். இதைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர் அலி ஹாம்ஸா, ஐந்தாம் மாடியில் பிரதமரை வரவேற்று அழைத்து சென்றார்.


Pengarang :