NATIONAL

துன் மகாதீர்: 1எம்டிபி ஊழல் மிக மோசமானது

ஷா ஆலம், மே 16:

1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி) ஊழல் விசாரணையில் மிக அதிகமான மோசடிகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். தேசிய தணிக்கை குழு அறிக்கையை படித்த பிறகு இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் காவல்துறை அதிகாரிகளின் விளக்கமும் அளிக்கப்பட்டது.

”  நாம் நடவடிக்கை எடுக்கப் போகிறோம், காவல்துறையில் புகார் செய்யப்படும். முழுமையான  விசாரணைக்கு பிறகு கைது நடவடிக்கை பாயும். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி செய்யப்படும்,” என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார்.

 

 

 

 

 

 

 


Pengarang :