SELANGOR

பாஃயா ஜராஸ் மக்களின் ஆதரவு என் வெற்றிக்கு காரணம் – கைருடின்!!

சுங்கை பூலோ,மே11:

பாஃயா ஜராஸ் தொகுதியை தற்காத்துக் கொண்டதற்கு மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும் அவர்களின் ஆதரவும் தான் பெரும் காரணம் என கைருடின் தெரிவித்தார்.

கெஅடிலான் கட்சியில் இணைந்து மீண்டும் இத்தொகுதியில் பிட்டியிட்டு தொகுதியை தற்காத்துக் கொண்டதற்கு தனது சேவையும் மூலதனம் என கூறிய அவர் 13வது பொதுத் தேர்தலை காட்டிலும் இம்முறை அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

எந்த கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமில்லை.நல்ல சேவையை முன் வைத்தால் மக்கள் தொடர்ந்து நமக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர் டத்திஸ்ரீ அஸ்மின் அலியின் தலைமையில் சிலாங்கூர் மாநிலத்தில் பாக்காத்தான் கூட்டணி வலுவாய் இருபதாகவும் அவரது பரிவு மிக்க திட்டங்கள் மக்கள் மத்தியில் நன் வரவேற்பை பெற்றிருப்பதோடு அதுவே தனது வெற்றிக்கு வித்திட்டதாகவும் கூறினார்.

டத்தோஸ்ரீ அஸ்மின் முன் வைத்துள்ள பரிவு மிக்க திட்டங்கள் மக்கள் மத்தியில் தொடர்ந்து உயிர்ப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு தொகுதியிலும் அஃது முறையாக மக்களிடையே சென்றடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் அஸ்மின் தலைமையிலான மாநில அரசாங்கம் மக்களுக்கான நன் அரசாங்கம் என்பதை தேர்தல் முடிவு பறைச்சாற்றுவதாகவும் அவர் கூறினார்.


Pengarang :