PBT

மக்களின் வசதிக்காக நடமாடும் முகப்பு – எம்பிபிஜே தொடங்கியது!!

பெட்டாலிங் ஜெயா, மே 31:

மக்களின் நன்மைக்காகவும் அவர்களின் கட்டண நடவடிக்கைகளை மேலும் எளிதாக்கவும் பெட்டாலின் ஜெயா மாநகரமன்றம் (எம்பிபிஜே) நடமாடும் சேவை முகப்பினை தொடங்கியுள்ளது.இச்சேவை ஜூன் மாதம் முழுவதும் செயல்பாட்டில் இருக்கும் என்றும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சேவையில் ஈடுபடும் எனவும் அதன் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு தனது அறிக்கையில் கூறியது.

இத்திட்டத்தின் கீழ் கட்டண முகப்பில் மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை என்றும் அங்கு நிலவும் கூட்ட நெரிசலை குறைக்க முடியும் என்றும் அந்த் அறிக்கையில் கூறப்பட்ட நிலையில் இந்த செயல்முறை மக்களுக்கு எளிதான சூழலை உருவாக்குவதோடு நிறைவான சேவையாகவும் அஃது விளங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 30ஆம் தேதி வரையி இச்சேவை நடப்பில் இருக்கும் எனவும் கூறிய அந்த அறிக்கை பெட்டாலிங் ஜெயா மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் தங்களின் வரி மற்றும் இதர கட்டணங்களை செலுத்திட இது ஏதுவாக அமையும் என்றது.இருப்பினும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு இச்செவை வரும் 13 ஜூன் முதல் 20 ஜூன் வரை மூடப்படும் என்றும் அவ்வறிக்கை கூறியது.

ஒவ்வொரு நாளும் இச்சேவை காலை மணி 10 முதல் மதியம் 3 மணி வரை செயலில் இருக்கும் என கூறிய அவ்வறிக்கை ஜூன் 1ஆம் தேதி முதல் 4தேதி வரை பிஜெயு டாமான்சார மெக்டோனல் அருகிலும் ஜூன் 5ஆம் தேதி முதல் 10ஜூன் வரை எஸ்.எஸ்24 பகுதியிலும் சேவையில் இருக்கும் என கூறியது.அதனை தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா பகுதியில் தொடர்ந்து இச்சேவை நீடிக்கும் என்றும் சம்மதப்பட்ட அறிக்கை கூறியது.


Pengarang :