NATIONAL

லஞ்சம் ஊழல் ஆணையத்தின் தலைவரானார் முகமட் சுக்ரி !!

ஷா ஆலாம்,மே18:

மலேசிய லஞ்சம் ஊழல் ஆணையத்தின் (எஸ்.பி.ஆர்.எம்) புதிய தலைவராக முகமட் சுக்ரி நியமிக்கபட்டார்.

அவரது அந்த நியமனத்திற்கு எஸ்.பி.ஆர்.எம் வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டதோடு அவரை வரவேற்பதாகவும் அறிக்கை வழி அஃது தெரிவித்தது.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் முகமட் சுக்ரி மக்களின் எதிர்பார்ப்பிற்கு உகர்ந்து செயல்படுவதோடு சுதந்திரமாகவும் தனிச்சையாகவும் இயங்கும் என்றும் நம்புவதாக குறிப்பிட்டிருந்தது.

முகமட் சுக்ரியின் இந்த நியமனத்தை பிரதமர் துன் மகாதீர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

புதிதாக பொறுப்பேற்கும் முகமட் சுக்ரி அப்துல்லா சுமார் 32 ஆண்டுகள் இந்த ஆணையத்தில் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :