ஷா ஆலம், மே 26:
தரைப் பொது போக்குவரத்து ஆணையத்தின் (ஸ்பாட்) நிரந்தர ஊழியர்கள் நிறுத்தப் படமாட்டார்கள் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ பூஃக் கூறினார். அண்மையில் புதிய மத்திய அரசாங்கம் ஸ்பாட்டை கலைத்து போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் என்று அறிவித்துள்ளது. ஸ்பாட் செயல்பாடுகள் எப்போதும் போல இயங்கும் என்றும் உறுதிப் படுத்தியது.
” ஸ்பாட் நடவடிக்கைகள் எப்போதும் போல இயங்கும், ஆனால் தற்போது போக்குவரத்து அமைச்சின் கீழ் செயல்படும். இனி ஏதும் தகவல்கள் இருந்தால், அவ்வப்போது தெரிவிக்கப்படும்,” என்று தனது அறிக்கையில் அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.