ஷா ஆலம், மே 16:
எதிர் வரும் ஜூன் 1-இல் இருந்து பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அகற்றப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது. தமது அறிக்கையில் நிதி அமைச்சு, எல்லா பதிவு பெற்ற வணிகர்களும் இந்த ஆணையை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
” இதனிடையே, எல்லா பதிவு பெற்ற வணிகர்களும் ஏற்கனவே உள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வரி ரசீது வெளியிடுவது மற்றும் வரி அறிக்கை போன்றவை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்,” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் கொள்கை அறிக்கையில் 100 நாட்களில் ஜிஎஸ்டி அகற்றப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.