ஷா ஆலாம், ஜூன் 22:
சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவி ஜூன் 30-இல் முடிவடையும் என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றம், பொது போக்குவரத்து மற்றும் புதிய கிராம மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினர் எங் ஸி ஹான் கூறினார். இந்த நியமன காலவரம்பு நீட்டிக்கபடாது என்று அவர் விவரித்தார். அண்மையில் டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியில் உண்மையில்லை என்று உறுதி படுத்தினார்.
” எல்லா பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை இந்த வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து, ஜூன் இறுதி வாரத்தில் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். புதிய ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஜூலை 2018-இல் தங்களின் பணியை தொடங்குவார்கள்,” என்று தமது அறிக்கையில் எங் ஸி ஹான் குறிப்பிட்டுள்ளார்.