NATIONAL

அரசாங்க அமைப்புகளின் மறுசீரமைப்பு பரிந்துரைகள்?

கோலா லம்பூர், ஜூன் 19:

அரசாங்க   அமைப்புகளைச்   சீரமைக்கும்   குழு (ஐஆர்சி)  இதுவரை  ஏழு   பரிந்துரைகளை   அரசாங்க   ஆலோசனை  மன்ற(சிஇபி)த்திடம்   சமர்ப்பித்துள்ளது.

இன்று   கோலாலும்பூரில்    அப்பரிந்துரைகள்    குறித்து    இல்ஹாம்   கோபுரத்தில்    சிஇபி-இடம்  விளக்கமளித்த   பின்னர்     செய்தியாளர்களைச்   சந்தித்த   ஐஆர்சி   உறுப்பினர்களில்   ஒருவரான   அம்பிகா  ஸ்ரீநிவாசன்,  “     தற்போது ஏழு   பரிந்துரைகள்    சமர்ப்பிக்கப்பட்டுள்ளன”,  என்று   தெரிவித்தார்.

“ஏழு   பரிந்துரைகளும்   ஐஆர்சி   ஏற்கனவே  சிஇபி-இடம்  வழங்கிய  மூன்றாவது     அறிக்கையில்    அடங்கியுள்ளன”,  என  ஐஆர்சி-இன்  இன்னோர்  உறுப்பினரான   மா  வெங்  குவாய்   கூறினார்.

இன்று  கொடுக்கப்பட்டது    நான்காவது     அறிக்கை.   ஐஆர்சி-இன்   இறுதி   அறிக்கை  ஜூலை   15-இல்  ஒப்படைக்கப்படும்    என  மா   கூறினார்.

“இறுதி   அறிக்கைதான்  முழுமையானது.  அதில்   எல்லாப்   பரிந்துரைகளும்  விவரங்களும்   உள்ளிட்டிருக்கும்”,  என்றாரவர்.


Pengarang :