NATIONAL

கைப்பற்றப்பட்ட பொருட்கள் ரிம 1.1 பில்லியன் மதிப்பிலானது !!!

கோலா லம்பூர், ஜூன் 27:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் அவர்களுக்கு சொந்தமான அபகரிக்கப்பட்ட பொருட்களின் விலை மதிப்பு ரிம 900 பில்லியனில் இருந்து ரிம 1.1 பில்லியன் இருக்கும் என்று புக்கிட் அமான் வணிக குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் டத்தோ ஸ்ரீ அமார் சிங் இஸார் சிங் தெரிவித்தார்.

இந்த தகவலை இன்று அதிகாரப்பூர்வமாக செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவித்தார். கடந்த மே 21-இல் இருந்து ஜூன் 25 வரை தனது காவல்துறை அதிகாரிகள் கணக்கீடு செய்ததாக கூறினார்.

”  பண மதிப்பு அதிகமாக இருந்தால்  கணக்கீடு மற்றும் பரிசோதனை நீண்ட நேரம் எடுத்தது. எட்டு குழுக்களாக பிரிந்து மொத்தம் 150 அதிகாரிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்,” என்று தெரிவித்தார்.

 


Pengarang :