SELANGOR

புதிய சிலாங்கூர் மந்திரி பெசாராக அமிரூடின் ஷாரி பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்

கிள்ளான், ஜூன் 19:

சிலாங்கூர் மாநிலத்தின் 16-வது மந்திரி பெசாராக சுங்கை துவா சட்ட மன்ற உறுப்பினர் அமிரூடின் ஷாரி (வயது 38) இன்று கிள்ளான் ஆலாம் ஷா அரண்மனையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். இன்று காலை 10.15 மணிக்கு  பதவி பிரமாணம் எடுத்துக் கொள்ளும் சடங்கு சிலாங்கூர் மன்னர் சுல்தான் ஷாராஃபூடின் இட்ரிஸ் ஷா முன்னிலையில் நடைபெற்றது.

சிலாங்கூர் மாநில இளையோர் மேம்பாடு, விளையாட்டு, பண்பாடு மற்றும் தொழில் முனைவர் மேம்பாடு ஆட்சிக் குழு உறுப்பினரான அமிரூடின் ஷாரி தனது மனைவி மாஸ்டியான முகமட் உடன் காலை 8.20-க்கு ஆலாம் ஷா அரண்மனை வளாகத்தில் வந்து இறங்கினார்.

 


Pengarang :