ஷா ஆலாம், ஜூன் 22:
புதிய பேங்க் நெகாராவின் கவர்னருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டத்தோ நூர் ஷாம்சியா முகமட் யூனூஸுக்கு நிதியமைச்சர் லிம் குவான் எங் வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஜூன் 19-இல் துன் டாக்டர் மகாதீர் முகமட் பரிந்துரையை தொடர்ந்து மேன்மை தங்கிய மாமன்னர் சுல்தான் முகமட் V அனுமதி வழங்கி நூர் ஷாம்சியாவை கவர்னராக நியமித்தார்.
” மலேசியா பேங்க் நெகாராவின் கவர்னராக டத்தோ நூர் ஷாம்சியா முகமட் யூனூஸ் எதிர் வரும் ஜூன் 30, 2023 வரை ஐந்து ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். இதற்கு முன்பு, துணை கவர்னராக பதவி வகித்து வந்தார்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.