NATIONAL

முதலீட்டாளர் மனத்தில் நம்பிக்கையை நிலைநிறுத்த வேண்டும் !!!

கோலா லம்பூர், ஜூன் 29:

முதலீட்டாளர்     மனத்தில்   நம்பிக்கையை    நிலைநிறுத்துவதன் வழி    வெளிநாட்டார்    தம்  கைவசமுள்ள   பங்குகளைப்    பங்குச்    சந்தையில்   தொடர்ந்து  விற்கும்   நிலைக்கு  முற்றுப்புள்ளி  வைக்க  முடியும்   என    அரசாங்கம்   உறுதியாக   நம்புகிறது.

அது  பாக்கத்தான்   ஹாரப்பானுக்கு   ஒரு   சவாலாகும்   என்பதை   ஒப்புக்கொண்ட   பொருளாதார  விவகார    அமைச்சர்,     சந்தை   நிலைப்பெற்றதும்   புதிய   அரசாங்கம்   முன்னெடுக்கும்   முயற்சிகள்   நல்ல  பலனைத்   தரும்   என்றார்.

“நம்பிக்கையை  நிலைபெற  வைப்பதற்குச்  சிறிது   காலம்  பிடிக்கும்.  புதிய   அரசாங்கத்தின்  முன்னெடுப்புகள்      முதலீடுகளை  இங்கேயே   வைத்துக்கொள்ள   வேண்டும்   என்ற   நம்பிக்கையை    அவர்களுக்கு   கொடுப்பதுடன்    மலேசியாவுக்கு   மேலும்  முதலீடுகளைக்  கவர்ந்திழுக்கவும்  உதவும்”,  என்று விவரித்தார்.


Pengarang :