SELANGOR

சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி சாஃபி காலமானார் – மந்திரி பெசார் இறுதி மரியாதை செலுத்தினார்

சா ஆலாம்,ஜூலை 03:

சுங்கை கண்டிஸ் சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி சாஃபி எதிர்பாராத விதமாய் காலமானார்.டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மாநில மந்திரி பெசாராக பதவி வகித்த போது அவரது அரசியல் செயலாளருமாகவும் பதவி வகித்த சுஹாய்மி சாஃபி திடிர் மரணம் அடைந்தது சிலாங்கூர் வாழ் மக்களிடமும் கெ அடிலான் கட்சியினர் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

ஐம்பது வயதான சுஹாய்மி சாஃபி புற்றுநோய் காரணமாக காலை 2ஆம் தேதி காலை மணி 11.10க்கு சுபாங் ஜெயா மருத்துவ மையத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.சுஹாய்மி சஃபியின் மரண செய்தி அறிந்த மாநில மந்திரி பெசார் அமிரூடின் சாஹரி அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வண்ணம் சுல்தான் சலாவுடின் அஸ்லான் ஸா மசூதிக்கு வருகை புரிந்தார்.அவரோடு துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிசா மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஆகியோரும் உடன் வருகை புரிந்தனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட மந்திரி பெசார் செக்ஸன் 21இல் அமைந்திருக்கும் இஸ்லாமிய இடுகாட்டிற்கும் வருகை புரிந்து இறுதி மரியாதையும் செலுத்தினார்.அரசியல் பிரமுகர்கள் கட்சியினர் மற்றும் பொது மக்கள் என ஏராளமானோர் வருகை புரிந்து சுஹாய்மி சாஃபிக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :