SELANGOR

ஜோகூர் சட்டமன்ற பேராளர்கள் சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு வருகை புரிந்தனர்!!

ஷா ஆலாம்,ஜூலை14:

சிலாங்கூர் மாநில சட்டமன்றம் நாட்டின் பிற மாநில சட்டமன்றங்களோடு தத்தம் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ள தயாராக இருப்பதாக அதன் சபாநாயகர் ங் சுய் லிம் தெரிவித்தார்.

ஜனநாயக முறையில் இஃது மிகவும் ஆரோக்கியமானது மட்டுமின்றி நாட்டின் ஜனநாயக தன்மையை மேம்படுத்தவும் பெரும் உதவி புரியும் என்றார்.

ஜோகூர் சட்டமன்ற பேராளர்கள் அதன் சபாநாயகர் சுஹாய்சான் கயாட் தலைமையில் சிலாங்கூர் சட்டமன்றத்திற்கு வரவேற்ற போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர்களின் வருகைக்கு நன்றி கூறிய அவர் இந்த வருகை மிகவும் அர்த்தம் நிறைந்தது என்றும் குறிப்பிட்டார்.இதன் மூலம் நல் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்வதோடு மாநில சட்டமன்றங்களின் உருமாற்றங்களும் பெரும் பங்காற்றும் என்றார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற அவை வருகையாளர்களை பெரிதும் கவர்ந்ததாக கூறிய அவர் மாநில அரசாங்கம் மற்றும் எதிர்கட்சிகளுக்குரிய விவாத தலம் நிறைவாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டி பெருமிதம் கொண்டதாகவும் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற அவை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விவரிக்கப்பட்டதோடு இச்சந்திப்பு இருமாநிலங்களின் பார்வையையும் செயல்பாடுகளையும் பகிர்ந்துக் கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறினார்.


Pengarang :