SELANGOR

இதுவரை 300,000 தாவாஸ் பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர் !!!

ஷா ஆலம், ஆகஸ்ட் 6:

சிலாங்கூர் வாரிசு குழந்தைகள் திட்டத்தில் (தாவாஸ்) இன்று வரை 323,186 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர் என்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 322,765 பங்கேற்பாளர்கள் உயிருடன் இருக்கும் நிலையில் மேலும் 403 பேர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தது.

இதில் 128,385 பங்கேற்பாளர்கள் தங்களின் சான்றிதழ்களை பெற்று விட்டதாகவும், மேலும் 194,380 பேர்கள் இன்னும் பெறாமல் உள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் மலாய்காரர்களின் எண்ணிக்கை 223,168 (69%), சீனர்கள் 56,239 (17%) , இந்தியர்கள் 34,640 (11%) மற்றும் மற்ற இனத்தவர்கள் 8,718 (3%) பதிவு செய்துள்ளார்கள் என்று விவரித்துள்ளது.


Pengarang :