Media News concept
SELANGOR

சமூக வலைதளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்; அவதூறு வேண்டாம்!!!

ஷா ஆலம், ஆகஸ்ட் 30:

மலேசிய மக்களிடம் சமூக வலைதளங்களை பயன்படுத்தி தவறான அல்லது அவதூறு செய்திகளை பரப்ப வேண்டாம் என்று சிலாங்கூர் மாநில சட்ட மன்ற துணை சபாநாயகர் முகமட் கைரூடின் ஓத்மான் தெரிவித்தார். இதன் மூலம் சம்பந்தப்பட்ட சில நபர்கள் ஒரு விஷயத்தை நேர்மறையான வகையில் மக்களுக்கு காட்டுகின்றனர் என்று விவரித்தார். மேலும் கைரூடின் கூறுகையில், இவர்களின் நடவடிக்கை ஒழுக்கமற்ற செயல் மட்டுமில்லாமல் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்துகிறது என்றார்.

” சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் ஒரு விஷயத்தை பரப்பும் பொழுது சமுதாயத்திற்கு பயன் தரும் வகையில் இருக்க வேண்டும். தவறான அல்லது அவதூறு  தகவல்களை பரப்பும் நோக்கில் சமுதாயத்தை பாதிக்கும். சில நேரங்களில் சிறிய விஷயமாக இருந்தாலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கைரூடின் தெரிவித்தார்.


Pengarang :