ஷா ஆலம், ஆகஸ்ட் 7: பாலாக்கோங் மற்றும் ஸ்ரீ செத்தியா சட்ட மன்றங்களுக்கான இடைத்தேர்தல்களை இணைத்து ஒரே தேதியில் நடத்த மலேசிய தேர்தல் ஆணையத்திடம் (எஸ்பிஆர்) கெஅடிலான் கட்சி பரிந்துரை செய்துள்ளதை அதன் தலைமைச் செயலாளர் டத்தோ சைப்பூஃடின் நாசூத்தியோன் கோடி காட்டினார்.
இதன் மூலம் செலவீனங்களை குறைக்க முடியும் என்றும் ஆள்பலத்தையும் திறன்மிக்க முறையில் செயல்படுத்த முடியும் என்று விவரித்தார்.
” எஸ்பிஆர் எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம். இதன் வழி ஆள்பலம் மற்றும் செலவீனங்களை குறைக்க முடியும்,” என்று சீனார் ஹாரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி தங்களின் ஆதரவை பெருக்க பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று சைப்பூஃடின் கூறினார். ஆனாலும், ஆதரவு இருந்தாலும், வாக்காளர்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் உள்ளதை ஆராய்ந்து வருவதாக கூறினார்.