SELANGOR

தேசிய கொடியை பறக்கவிடுவோம்…

சுபாங் ஜெயா, ஆகஸ்ட் 22:

அனைத்து ருக்குன் தெதாங்கா பகுதிகளிலும் நாட்டை நேசிக்கும் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மைக்கல் ங் மே ஷீ கோரிக்கை விடுத்தார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் மற்றும் போராட்டவாதிகளை நினைவுக்கூறும் விதமாகவும் மரியாதை செலுத்திடும் விதமாகவும் ஒவ்வொருவரும் தேசிய கொடியை தேசிய ஒருமைப்பாட்டுடன் பறக்க விட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு மைடின் பேராங்கடியில் நடைபெற்ற மலேசியாவைநேசிப்போம் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார்.மேலும்,நாட்டின் சுதந்திர தினத்தை தேச உணர்வோடு கொண்டாடிட மைடின் பேராங்காடி மேற்கொண்டிருக்கும் இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றார்.

மலேசியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நாட்டுப்பற்றும் தேசிய ஒருமைபாடும் மேலோங்கியிருக்க வேண்டும்.அவ்வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் வாகனங்களிலும் தேசிய கொடியை ஒவ்வொரு மலேசியரும் பறக்க விட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மலேசியா ஒரு ஜனநாயக நாடு.இங்கு அரசியல் கருத்துவேறுபாடுகள் களைந்து ஒரே சிந்தனையோடும் தேசிய தினத்தை கொண்டாடும் மலேசியர்களின் தேசிய உணர்வு போற்றுதல்குரியது எனவும் அவர் கூறினார்.நாடு முழுவதும் தேசிய தினத்தை நாம் கொண்டாடி மகிழ வேண்டும் என்றும் அந்நாளில் நம்மிடையே இனம்,மதம் கடந்து ஒற்றுமையும் புரிந்துணர்வும் மேலோங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.


Pengarang :