NATIONAL

முஹிடின் மருத்துவமனையில் வெளியேற அனுமதி?

ஷா ஆலம், ஆகஸ்ட் 7:

உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசீன் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வெளியேற இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவரின் ஊடகச் செயலாளர் ஹாஃபீஸ் அப்துல் ஹாலிம் தெரிவித்தார். முஹிடின் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ சிகிச்சை இத்துடன் முடிவுற்றது என்று விவரித்தார் .

” அவர் தமது குடும்பத்துடன் தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொள்ள போகிறார். முஹிடின் யாசீனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்,” என்று முஹிடின் யாசீனின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இன்று பதிவு செய்துள்ளார்.


Pengarang :