புத்ராஜெயா, செப்டம்பர் 23 :
நாட்டின் மூன்றாவது தேசிய கார் உருவாக்கத்திற்கு மைஃடி எனப்படும் மலேசியா உயர்தொழில்நுட்ப தொழில் குழுமம் உதவிடும் என பிரதமர் துன் மகாதீர் கூறினார்.நாட்டின் 3வது தேசிய கார் திட்டத்திற்கு மைஃடி பெரும் பங்காற்றிடும் வேளையில் நாட்டின் மேம்பாட்டிற்கும் நாட்டை மீண்டும் வளமாக இலக்கிற்கு கொண்டு செல்லவும் மூன்றாவது தேசிய கார் திட்டம் அவசியமாவதாகவும் மகாதீர் கூறினார்.
இதன் மூலம் பொருளாதார ரீதியிலும் நாட்டிற்கு அஃது பெரும் பங்காற்றும் என்றும் கூறிய துன் மகாதீர் இதன் மூலம் உயர் தொழில் நுட்பமும் நாட்டில் அடுத்தக்கட்டத்திற்கு நகரும் என்றார்.மேலும்,அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதாகவும் ஒவ்வொருவரும் அதற்கு பங்காற்றிட வேண்டும் என குறிப்பிட்டதோடு நாட்டின் மூன்றாவது தேசிய கார் திட்டம் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அஃது உதவிடும் என்றார்.
அதேவேளையில்,நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நாட்டின் உற்பத்தி சக்தியை மேம்படுத்த வேண்டும்.அதேவேளையில் நம் நாட்டில் உற்பத்தி செய்து அதனி பிற நாடுகளில் விற்கும் நிலையிலான உற்பத்தியை நாம் உருவாக்க வேண்டும்.அதற்கு தேசிய கார் திட்டம் வழிகோலும் என்றும் குறிப்பிட்டார்.