NATIONAL

எஸ்எஸ்டி: நவம்பர் 15 தொடங்கி பொருட்களின் விலைகள் ஒரு முகப்படுத்தப்படும்

புத்ரா ஜெயா, அக்டோபர் 19:

விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்எஸ்டி ) பின்பற்றி எல்லா பேரங்காடி மற்றும் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலைகளை நவம்பர் 15 தொடங்கி  ஒரு முகப்படுத்தப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் நலன் அமைச்சின் அமலாக்க பிரிவு இயக்குனர் டத்தோ முகமட் ரோஸ்லான் மாயூடின் கூறினார்.

” சில கடைகளில் இன்னும் பழைய பொருட்கள் விற்பனை ஆகாமல் உள்ளது. சில இடங்களில் விற்று தீர்ந்து விட்டது. ஆகவே, புதிய விலையை நிர்ணயம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது,” என்று விவரித்தார்.


Pengarang :