NATIONAL

ஜேபிஎன்: புதிய அடையாள அட்டைகளை விண்ணப்பம் செய்யும் படி அறைகூவல்

கோலா லம்பூர், அக்டோபர் 19:

தேசிய பதிவு இலாகா (ஜேபிஎன்) ஏறக்குறைய 3,247,589 மலேசிய மக்களை புதிய மைகார்ட்டிற்கு விண்ணப்பம்  செய்யும் படி அறைகூவல் விடுத்துள்ளது. ‘புதிய மைகார்ட் மாற்றுவோம்’ என்ற பிரச்சாரத்தில் இந்த அறைகூவலை தேசிய பதிவு இலாகா தலைமை இயக்குநர் டத்தோ முகமட் ராஸீன் அப்துல்லா விடுத்தார். 81,250 மலேசிய மக்கள் அதிநவீன அடையாள அட்டைகளை வைத்துள்ள வேளையில், இன்னும் 13,525 பேர்கள் முதன் முதலாக வெளியிட்ட அடையாள அட்டைகளை வைத்துள்ளனர் என்ற தகவலை அவர் வெளியிட்டார்.

”  ஜூன் 30 வரை மைகார்ட் பெற்றிருக்கும் மலேசியர்களின் எண்ணிக்கை 22,664,773. ஆனாலும், இன்னும் 19,322,409 மலேசிய குடிமக்கள் புதிய மைகார்ட்டிற்கு விண்ணப்பம் செய்யாமல் உள்ளனர். ஆகவே, உடனடியாக மைகார்ட்டிற்கு மாற்றம் செய்யுமாறு சம்பந்தப் பட்டவர்களை கேட்டுக் கொள்கிறேன்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Pengarang :