SELANGOR

அஸ்மின் மற்றும் அமிரூடின் கோலா சிலாங்கூரில் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

கோலா சிலாங்கூர், நவம்பர் 9:

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மற்றும் மத்திய பொருளாதார விவகார அமைச்சர்  டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஆகியோர் சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் (யூபென்) விளக்கக் கூட்டத்தில் இன்று மாலை  கலந்து கொண்டனர். கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் மேம்பாட்டு திட்டங்களை பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது என்று  பொருளாதார திட்டமிடல் பிரிவின் இயக்குனர் டத்தோ அமாட் சுஹாய்டி அப்துல் ரஹீம் கூறினார்.

இந்த விளக்கக் கூட்டத்தில் சிலாங்கூர் மாநில நகர் மற்றும் புறநகர் மேம்பாடு இலாகா இயக்குனர் முகமட் ரிஸூவான் அர்ஷாட், பெர்மாத்தாங் சட்ட மன்ற உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடீன், புக்கிட் மெலாவாத்தி சட்ட மன்ற உறுப்பினர் ஜூவாரியா ஸூல்கிப்லி மற்றும் ஈஜோக் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர்  இட்ரிஸ் அமாட் ஆகியோர் உடன்  கலந்து கொண்டனர்.


Pengarang :