SELANGOR

எம்பிஎஸ்ஜே-வை மாநகராட்சியாக உயர்த்த சிலாங்கூர் இலக்கு!!!

ஷா ஆலம், நவம்பர் 23:

எதிர் வரும் 2019-இல் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் நிர்வாகத்தை மேலும் திறன்மிக்க முறையில் செயல்படுத்த பல்வேறு திட்டங்கள் வரைந்துள்ளதை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி உறுதிப் படுத்தினார். இதன் அடிப்படையில் சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தை சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றமாக தரம் உயர்த்தப்படும் வேளையில் மேலும் இரண்டு மாவட்ட மன்றங்கள் நகராண்மை கழகமாக உருவெடுக்கும் என்று விவரித்தார்

”  மாநில அரசாங்கம் இரண்டு ஊராட்சி மன்றங்களை இலக்கு வைத்து நகராண்மை கழகமாக மாற்றுகிறது. இதில் கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் மற்றும் கோலா லங்காட் மாவட்ட மன்றமும் அடங்கும் என்றார். அதே வேளையில், சுபாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றமாக மாற்றப்படும்,” என்று சிலாங்கூர் மாநில சட்ட மன்றத்தில் மாநிலத்தின் 2019-இன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Pengarang :