NATIONAL

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மந்திரி பெசாரின் வாழ்த்துக்கள்

ஷா ஆலம், நவம்பர் 13:

இன்று மலேசிய கல்வி சான்றிதழ் (எஸ்பிஎம்) தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில  மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

”  தேர்வில் சிறப்பான முறையில் பதில் அளித்து வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். இறுதியில் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற எல்லா வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்,” என்று தமது டிவிட்டரில் அமிரூடின் ஷாரி பதிவு செய்துள்ளார்.

இன்று தொடங்கி டிசம்பர் 13 வரை 421,706 மாணவர்கள் 2018-ஆம் ஆண்டிற்கான எஸ்பிஎம் தேர்வு எழுதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :