SELANGOR

ரூமா சிலாங்கூர்கூ வீட்டு விண்ணப்பங்கள் தொடங்கிவிட்டது !!!

ஷா ஆலம், நவம்பர் 09:

சிலாங்கூர் மாநிலத்தின் ரூமா சிலாங்கூர்கூ வீட்டு விண்ணப்பங்கள் பொது மக்களுக்காக திறந்து விடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநில சொத்துடமை கண்காட்சியில் இதற்கான விண்ணப்பங்கள் திறந்து விடப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கண்காட்சி 8/11/2018 தொடங்கி 11/11/2018 வரை செத்தியா சிட்டி பெரும் வணிக தலத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடைபெறும் இக்கண்காட்சியில் சிலாங்கூரின் டெங்கில், மோரிப், காப்பார், ஈஜோக்,டாமான்சாரா, செராஸ் மற்றும் ரவாங் ஆகிய பகுதிகளில் ரூமா சிலாங்கூர்கூ திட்டத்தில் விண்ணப்பம் செய்துக் கொள்ள வழிசெய்யப்படும் என மாநில வீடமைப்பு மற்றும் நகர்புற நல்வாழ்வு துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ஹனிசா தால்ஹா தெரிவித்தார்.

இந்த கண்காட்சி தொடர்பிலும் ரூமா சிலாங்கூர்கூ தொடர்பிலும் தகவல் அறிய சிலாங்கூர் சொத்துடமை வாரியத்தை அணுகுமாறும் கேட்டுக் கொண்டார்.இந்த ஒப்பந்தந்ததில் கணவன் மனைவி அடிப்படையில் எதுவும் மேற்கொள்ளப்படாது.மாறாய், தனிநபர் மற்றும் விண்ணப்ப தகுதியை அஃது உள்ளடக்கியிருக்கும் என்றார்.

விண்ணப்பம் செய்ய வருவோர் ஊதிய தகவல் ரசீது,ஊழியர் சேமநீதி தகவலின் நகல் மற்றும் தான் கருப்புபட்டியலில் இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழ் ஆகியவற் றை உடன் கொண்டுவருமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
அதற்கு முன்னதாக ஒப்பந்தம் செய்ய முன் வருவோர் ரூமா சிலாங்கூர்கூவிற்கு முறையான விண்ணப்பத்தை செய்திருக்க வேண்டும்,மேலும்,விண்ணப்ப தகுதி மற்றும் கடன் விண்ணப்பம் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும் என்றார்.


Pengarang :