RENCANA PILIHAN

அரசாங்கம்: ஜனவரி 1 முதல் எண்ணெய் விலை குறைக்கப்படும்

புத்ரா ஜெயா, டிசம்பர் 24:

எதிர் வரும் ஜனவரி 1-இல் இருந்து ரோன் 95 ரக பேட்ரோல் விலை குறைக்கப்படும் என்று மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

” தற்போதைய நிலவரப்படி, உலக கச்சா எண்ணெய் சந்தை விலை குறைந்து வருவதால் அரசாங்கம் எதிர் வரும் ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து எரிபொருள் சில்லறை விற்பனை விலையை குறைக்க உத்தேசித்துள்ளது. மேலும் தற்போது எரிபொருள் விலையை நிர்ணயம் செய்யும் வழியை மாற்றி வாரம் ஒருமுறை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது, ” என நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று வெளியிட்ட அறிக்கையில்  தெரிவித்தார்.


Pengarang :