SELANGOR

கூடிய விரைவில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்?

ஷா ஆலம், டிசம்பர் 16:

சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைமைத்துவத்தை தேர்ந்தெடுக்க கூட்டம் நடத்தப்படும் என்று  புதிதாக சிலாங்கூர் மாநில கெஅடிலான் தலைவராக நியமிக்கப்பட்ட அமிரூடின் ஷாரி கூறினார். ஹாஜ் யாத்திரை மேற்கொண்டு மெக்கா சென்றிருக்கும் அமிரூடின் நாடு திரும்பிய பிறகு மாநில கெஅடிலான் கூட்டம் நடத்தப்படும் என்றார்.

மேலும், கட்சியின் தேர்தல் முடிந்து விட்டதால், அனைத்து உறுப்பினர்களும் விரோதங்களை மறந்து மீண்டும் ஒற்றுமையாக கட்சியை வலுப்படுத்த பாடு பட வேண்டும் என்று அமிரூடின் வலியுறுத்தினார்.

” 2018-2021-ஆம் தவணைக்கு என்னை சிலாங்கூர் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். இவ்வேளையில், என்னை தேர்வு செய்த கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ அஸ்மின் அலி ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று தமது அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :