PBT

கெடிஈபி திடக்கழிவு நிறுவனம் சிறந்த முறையில் செயலாற்றுவதாக எம்டிகெஎஸ் நம்பிக்கை

கோலா சிலாங்கூர், டிசம்பர் 27:

தனது நிர்வாகத்தில் இருக்கும் பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதில் கெடிஈபி திடக்கழிவு நிறுவனம் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதாக கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் (எம்டிகெஎஸ்)  நம்பிக்கை தெரிவித்தது. எம்டிகெஎஸ்-இன் தலைவர் ரஹீலா ரஹ்மாட் கூறுகையில், திடக்கழிவு நிர்வாகத்தை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம் மக்களின் தரமான வாழ்க்கை முறையை வாழ வழி வகுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் விவரிக்கையில், எம்டிகெஎஸ் கடந்த ஆண்டு 148 புகார்கள் பதிவு செய்த நிலையில், இந்த ஆண்டு 229 புகார்களை பெற்றுள்ளதாக அவர் கூறினார். மற்ற ஊராட்சி மன்றங்களை காட்டிலும் மிகவும் குறைவாக இருந்தாலும் சரியான தீர்வு காண வேண்டும். அப்படி இல்லை என்றால் நிலைமை மோசமாக இருக்கும் என்று விவரித்தார்.


Pengarang :