SELANGOR

சீபில்ட் ஆலய விவகாரம்: மாநில அரசாங்கம், அட்டர்னி ஜெனரலின் அறிக்கையை வரவேற்கிறது !!!

ஷா ஆலம், டிசம்பர் 15:

சீபீல்ட் ஆலய விவகாரத்தில் அட்டர்னி ஜெனரல் வெளியிட்ட அறிக்கையை மாநில அரசாங்கம் வரவேற்கிறது. சட்டத்தை மதித்து அட்டர்னி ஜெனரல் எடுத்த முடிவுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் தலை வணங்குகிறது என மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார்.

” டிசம்பர் 14-இல் அட்டர்னி ஜெனரல் சீபீல்ட் ஆலய விவகாரம் குறித்து  வெளியிட்ட அறிக்கையை மாநில அரசாங்கம் வரவேற்கிறது,” என்று தனது அறிக்கையில் அமிரூடின் தெரிவித்தார்.

கடந்த மாதம் சீபில்ட் ஆலய விவகாரம் தொடர்பில் கலவரம் நடந்து பிறகு எல்லா தரப்பினரின் வழக்கறிஞர்கள் முன்பு ஆலய நிலம் மற்றும் பண நிர்வாகம் குறித்து ஒருங்கிணைந்த முடிவு எடுக்கப்பட்டது.


Pengarang :