NATIONAL

துன் மகாதீர்: சிங்கப்பூர் – மலேசிய கடல் எல்லையை அளக்க அரசாங்கம் தயார்

ஷா ஆலம், டிசம்பர் 5:

மலேசிய கப்பல்கள் சிங்கப்பூர் குடியரசின் எல்லைக்குள் ஊடுருவியதாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில் மலேசிய – சிங்கப்பூர் கடல் எல்லையை அளக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

” நாம் எல்லையை அளந்து, உண்மையில் நமது நாட்டில் இருக்கிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும்,” என 21-வது அஞ்சல் துறை சீருடை தொழிற்சங்க மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :