புத்ரா ஜெயா, டிசம்பர் 9:
துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமை ஏற்கவில்லை என்றாலும் 15-வது பொதுத் தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி புத்ரா ஜேயா நிர்வாகத்தை நிலைநிறுத்த முடியும் என்று பிரதமர் கூறினார். ஆனாலும், மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்றால், ஊழலற்ற நிர்வாகமாக அமைந்திருக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது என்று புத்ரா ஜெயா பல்நோக்கு மண்டபத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு கூறினார்.
” 15-வது பொதுத் தேர்தலில் நான் தலைமை பொறுப்பில் இல்லை என்றாலும், நாம் நேர்மையான முறையில் அரசாங்கத்தை வழி நடத்தினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். ஆனால் நாம் ஊழல் ஆட்சி புரிந்தால் யார் தலைமை ஏற்றாலும் மக்கள் நம்மை தோக்கடிப்பார்கள்,” என்று துன் மகாதீர் தெரிவித்தார்.