SELANGOR

மந்திரி பெசார்:இரண்டு வாரங்களில் கோயில் தொடர்பில் முடிவு செய்யப்படும்

ஷா ஆலம், டிசம்பர்:

யுஎஸ்ஜே 25-இல் அமைந்துள்ள சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோவில் பிரச்சினையை தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருடன்  பேச்சுவார்த்தை நடத்திய பின் இரண்டு வாரங்களில் முடிவு அறிவிக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். இதற்கு முன், தமது தரப்பினர் பல்வேறு பேச்சுவார்த்தை நடத்தினர் என்று விவரித்தார்.

” இது வரை இரண்டு மூன்று  பேச்சுவார்த்தைகள் சிறந்த முறையில் நடைபெற்றது. ஓரிரண்டு வாரங்களில் முடிவு அறிவிக்கப்படும். எனக்கு இன்னும் இதன் தொடர்பாக எதுவும் தெரியாது,” என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற வளாகத்தின் முன் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.


Pengarang :