SELANGOR

மந்திரி பெசார் உற்சாகம்: பணியில் மீண்டும் திரும்ப ஆர்வம்

செப்பாங், டிசம்பர் 31:

ஹாஜ் யாத்திரையை மேற்கொண்ட பிறகு நீண்ட நேரம் பயணத்தின் விளைவாக மிகவும் களைத்துக் காணப்பட்டாலும் மீண்டும் பணியாற்ற உற்சாகமாக இருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். தற்போது சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் பதவியை தவிர கெஅடிலான் கட்சியின் மாநில தலைவராகவும் நியமனம் பெற்றுள்ள நிலையில் பொறுப்பு அதிகரித்து உள்ளதாக கூறினார்.

” இன்று என்னை வரவேற்க திரண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கூட்டம் எனது தனிப்பட்ட ஆதரவு கிடையாது. சிலாங்கூர் கெஅடிலானை மேலும் வலுப்படுத்தவதற்காக கூடிய கூட்டம் என்று கருத வேண்டும்,” என கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த திடீர் வரவேற்பு கூட்டத்தில் இவ்வாறு அமிரூடின் விவரித்தார்.


Pengarang :