SELANGOR

மார்ச் மாதத்திற்குள் புதிய துணை சபாநாயகர் நியமனம்?

கிள்ளான், டிசம்பர் 10:

புதிய சிலாங்கூர் மாநில சட்ட மன்ற துணை சபாநாயகர் நியமனம் எதிர் வரும் மார்ச் 2019-இல் நடக்கும் என திட்டமிடப்பட்டிருக்கும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்வார் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். கட்சியின் மாநில மற்றும் மத்திய தலைமைத்துவத்துடன் கலந்து பேசி முடிவு எடுக்க இருப்பதாக கூறினார்.

” கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது துணை சபாநாயகர் பதவியை முகமட் கைரூடின் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை சட்ட மன்ற சபாநாயகர் எங் சுவி லிம்மிடம் ஒப்படைத்தார். காலியாக உள்ள இந்த பதவி எதிர் வரும் மார்ச் மாதம் நடக்க இருக்கும் சட்ட மன்ற கூட்டத் தொடரில் நிரப்பப்படும்,” என்று அலாம் ஷா அரண்மனையில் நடைபெற்ற ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட நிகழ்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.


Pengarang :