SELANGORUncategorized @ta

100-க்கும் மேற்பட்டவர்கள் மந்திரி பெசாரை வரவேற்க கெஎல்ஐஏ வந்தனர்

செப்பாங், டிசம்பர் 31:

ஹாஜி யாத்திரையில் இருந்து திரும்பிய சிலாங்கூர் மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி மற்றும் குடும்பத்தினரை வரவேற்க 100-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோலா லம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கெஎல்ஐஏ) திரண்டு வந்தனர். எஸ்வி842 விமானத்தில் பயணித்த அமிரூடின் இரவு 10 மணிக்கு கெஎல்ஐஏ-வை வந்து சேர்ந்தார்.

கெஅடிலான் கட்சியின் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் மந்திரி பெசாரை வரவேற்க இரவு 8.30 மணியில் இருந்து அவர்கள் காத்திருந்த ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்பட்டது. அமிரூடின், அண்மையில் சிலாங்கூர் மாநில தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து பல பதாகைகளை ஆதரவாளர்கள் ஏந்தி வந்து நின்றனர்.

 


Pengarang :