SELANGOR

ஆசியான் வட்டாரத்தில் பெற்றிருக்கும் நன்மதிப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம்

ஷா ஆலம்,  ஜனவரி 3:

ஆசியான் வட்டாரத்தின் முக்கிய முதலீட்டு தளமாக விளங்கும் சிலாங்கூரின் நல்ல தோற்றமே, 2018 செப்டம்பர் மாதம் வரையில் அது 8.25 பில்லியன் வெள்ளி முதலீடுகளைப் பெறுவதற்கு முக்கிய காரணமாகும்.

மாநில அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் விளம்பர பிரச்சாரமும் அதிகமானோரை முதலீடு செய்யத் தூண்டியுள்ளது என்று முதலீடு மற்றும் சிறு, நடுத்தர வணிகம் மற்றும் தொழில்துறையின் மாநில ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

முதலீட்டாளர்களுக்கு சிறந்த சேவையை அளிப்பதோடு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை களைவதிலும் மாநில அரசு அதிக கவனம் செலுத்தி வந்துள்ளது என்று சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.

ஆயினும், 2019ஆம் ஆண்டுக்கான இலக்கை மாநில அரசு இன்னும் வகுக்கவில்லை என்றும் கடந்த ஆண்டின் பொருளாதார நிலை உட்பட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்ட பின்னரே அந்த இலக்கு நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :