SELANGOR

உணவகங்களின் தூய்மையை கண்காணிப்பீர்!

கிள்ளான், ஜன.25:

உணவகங்களும் அவற்றின் சுற்றுப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்ய இவ்விடங்களை கண்காணிக்கும்படி சிலாங்கூர் வீடமைப்பு ஊராட்சி துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உணவகங்கள் மீதான மக்களின் எதிர்மறையான எண்ணத்தை தவிர்க்க இது அவசியம் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

அண்மையில் மக்களின் கவனத்தை ஈர்த்த சம்பவம் போன்று மேலும் புதிய சம்பவங்கள் நிகழாதிருக்க தூய்மையைக் கண்காணிக்கும் நடவடிக்கை அதிகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்நடவடிக்கை மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும். உணவகங்களுக்கு வருகை புரிவோருக்கு இதமான சூழலை ஏற்படுத்த இந்நடவடிக்கை அவசியமாகும் என்றார் அவர்.

கிள்ளான நிலம் மற்றும் வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற மாநில அரசு கூட்டத்திற்கு தலைமையேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் அமிருடின் பேசினார்.

இதனிடையே, விதிமுறைகளை மீறிய சில உணவகங்கள் மீது ஷா ஆலம் நகராண்மைக் கழகம் எடுத்த கடுமையான நடவடிக்கையை அவர் மேற்கோள் காட்டினார்.


Pengarang :