SELANGOR

எம்பிஎஸ்ஜே: உணவகங்கள் மீது கடுமையான சோதனை நடவடிக்கை!

சுபாங் ஜெயா, ஜன.30:

சுபாங் ஜெயா நகராண்மைக் கழகத்திற்கு (எம்பிஎஸ்ஜே) உட்பட்ட உணவகம் மற்றும் அங்காடி கடைகள் மீது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விதிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறும் உணவகங்கள், குறிப்பாக சுகாதாரம், தூய்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் மெத்தனப் போக்கை கொண்டிருக்கும் தரப்பின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கழகத்தின் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

“உரிமம் பெற்ற அனைத்து உணவகங்கள் மீது ஆண்டுக்கு ஒரு முறையாவது சோதனை நடத்த வேண்டும்” என்ற இலக்கை தாங்கள் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

இந்த சோதனை நடவடிக்கையில், எம்பிஎஸ்ஜே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உணவகங்களும் உட்படுத்தப்படுவதோடு தரம் பிரிக்கப்படும் என்றும் நோராய்னி தெரிவித்தார். மேலும், சி அல்லது டி என்றும் தரம் பிரிக்கப்படும் உணவகங்களை உடனடியாக மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.


Pengarang :