SELANGOR

கிள்ளான் துறைமுகத்தில் கேபள் திருட்டுச் சம்பவம் அதிகரிப்பு

கிள்ளான் துறைமுகம், ஜன.17:

கிள்ளான் துறைமுக வட்டாரப் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் கேபிள் திருட்டுச் சம்பவங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன.

இந்த திருட்டுச் சம்பவங்களே இங்குள்ள தெரு விளக்குகளின் வெளிச்சத்தின் தரம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாக மாநில சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஸமான் ஹுரி கூறினார்.

கிள்ளான் நகராண்மை கழகம் மற்றும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இந்த துணை மின் நிலையங்களே பொறுப்பற்ற தரப்பினரின் திருட்டு நடவடிக்கைகளுக்கு அதிகம் இலக்காகி வருகின்றன.

சம்பந்தப்பட்ட மின் நிலையங்கள் பல முறை பழுது பார்க்கப்பட்ட போதிலும், இந்த கேபிள் திருட்டுச் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுவதால், இந்நிலையங்கள் திரும்பத் திரும்ப பழுதடைகின்றன என்று எம்பிகே மற்றும் பொதுப்பணித் துறையுடன் இணைந்து பாதிக்கப்பட்ட துணை மின் நிலையத்தைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.


Pengarang :