NATIONAL

கெஎப்சி மற்றும் மெக்டோனலட்ஸ் விலை உயர்வை விளக்கம் அளிக்க வேண்டும்

ஷா ஆலம், ஜனவரி 1:

உள்நாட்டு வணிகம் மற்றும்  பயனீட்டாளர் நலன் அமைச்சு விரைவு உணவு நிறுவனங்களான கெஎப்சி மற்றும் மெக்டோனலட்ஸ் ஆகியவற்றுக்கு அண்மையில் விலையை ஏற்றிய நடவடிக்கைக்கு விளக்கம் அளிக்க நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சின் அமலாக்கப் பிரிவு துணை இயக்குனர் இஸ்கண்டர் ஹாலிம் சுலைமான் மலேசியா கினியிடம் கூறுகையில், எதிர் வரும் ஜனவரி 5 வரை இரண்டு நிறுவனங்களுக்கும் விலையேற்றத்திற்கான முழுமையான அறிக்கையை கொடுக்க ஆணை பிறப்பிக்க பட்டுள்ளது என்பதை உறுதி படுத்தினார்.

இதற்கு முன், கெஎப்சி டிசம்பர் 2018-இல் இருந்து விற்கும் மற்றும் சேவை  வரி (எஸ்எஸ்டி) உட்பட்ட உணவுப் பொருட்களின் பட்டியலை வெளியிட்டது. சில பொருட்களின் விலையை உயர்த்தி சிறந்த சேவையை பயனீட்டாளர்களுக்கு வழங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாக அந்த அறிக்கையில் கூறி இருக்கிறது.


Pengarang :